மிக பெரிய பாளையங்களில் எட்டயபுரமும் ஒன்று.....!!! ஜெகவீர ராம குமாரப்ப எட்டப்ப நாயக்கர் என்ற அடுத்த பட்டதரசர் 1567 ஜனவரியில் இளசை என்ற பெயரை மாற்றி " எட்டயபுரம் " என்று பெயரை சூட்டி அங்கு சிவன் கோவில் , கோட்டை , அரண்மனை கட்டி " ராஜ கம்பள சாம்ராஜியத்தை " நிறுவுகிறார் . மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த குமார கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் எட்டயபுர அரசர் திருவிதாங்கூர் நாட்டுக்கு படையெடுத்து இரணியல் என்ற கோட்டையை தகர்த்தி திருவிதாங்கூர் நாட்டை வெல்கின்றனர் . வென்று திரும்பும் நிலையில் எதிரிகளின் அம்பு எய்தி எட்டயபுர அரசர் சாய்கிறார் . அப்பொழுது எட்டயபுர அரசர் எனது மக்களை ( கம்பளதார்களை ) இனி காவல் செய்வது யார் என்று கேட்டு இறந்து விடுகின்றார் . குமார கிருஷ்ணப்ப நாயக்கர் நான் நமது மக்களை கை விட மாட்டேன் என்றும் , என் உயிரை காப்பாற்ற உன் உயிரை தந்த அரசனே வீரனே இன்று முதல் உன் சந்ததிகள் " அய்யன் " என்ற பட்டம் கொண்டு வாழட்டும் என்று கூறி கழுகுமலை போன்ற பகுதிகளையும் எட்டயபுர அரசுக்கு தருகிறார் . அடுத்த வாரிசான ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யன் ஒரு நாள் வேட்டைக்க...
Comments
Post a Comment